Posts

Showing posts from July, 2025

மிகக் குறைந்த விலையில் வளர்ச்சிக்காகவும் பயிர் பாதுகாப்புக்காகவும் பயன்படும் கரைசல்கள்

  மிகக் குறைந்த விலையில் வளர்ச்சிக்காகவும் பயிர் பாதுகாப்புக்காகவும் பயன்படும் கரைசல்கள் 200 லிட்டர் தண்ணீரில் கோமியம் 20 லிட் ஆமணக்கு எண்ணெய் 2 லிட் மீன் அமிலம் 3 லிட் இக்கரைசல் கலந்து வைத்த பிறகு தயாராக 15 நாட்கள் ஆகும். தினசரி கலக்கி விடலாம். 10 லிட்டர் தண்ணீரில் இதிலிருந்து ஒரு லிட்டர் திரவம் எடுத்து கலந்து பயிர்களுக்கு தெளிப்பதால் வளர்ச்சியும் பூச்சி தாக்குதல் இல்லாமலும் இருக்கும். நன்றி: திரு. திண்டுக்கல் பிரிட்டோ ராஜ், வேளாண் பொறியாளர்

வெள்ளை வேலாம்பட்டை கரைசல் தயாரிக்கும் முறை

 தேவையான பொருட்கள் 1. வெள்ளை வேல மரப்பட்டை - 10 கிலோ 2. நாட்டு சர்க்கரை - 15 கிலோ 3. தென்னைக்குறும்பை - 5 கிலோ 4. கடுக்காய் -250 கிராம் 5. கொடி பிரண்டை - 2  கிலோ 6. கறுப்பு பன்னீர் திராட்சை - 1கிலோ 7. தண்ணீர் - 15 லிட்டர் 8. வாழைப்பழம் -10 9. வைக்கோல் - 1கிலோ 10. பிளாஸ்டிக் டிரம்(200லி) -1 செய்முறை 50 லிட்டர் தண்ணீரில் ஊற்றப்பட்ட டிரம்மில் துண்டு துண்டாக நறுக்கப்பட்ட வேல மரப்பட்டை, இரண்டாக உடைக்கப்பட்ட தென்னம் குறும்பைகள், நாட்டு சர்க்கரை,  நறுக்கப்பட்ட பிரண்டை,  பொடியாக அரைக்கப்பட்ட கடுக்காய்ப் பொடியை ஒன்றாகப் போட்டு கலக்க வேண்டும். தோலுடன் உரித்து வாழைப்பழம், திராட்சை மற்றும் வைக்கோலையும் போட்டு நன்றாக கலக்கி விட வேண்டும்.  காலை, மாலை என இருவேளையும் தொடர்ந்து 15 நாட்கள் கலக்கி வர வேண்டும். பின்பு 16 ஆம் நாள் டிரம்மின் முழுக் கொள்ளளவு  வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். 17 ஆம் நாள் முதல் இக்கரைசலை பயன்படுத்தலாம்.  டிரம்மின் வாய்ப்பகுதியை ஈக்கள் , கொசுக்கள் செல்ல முடியாதவாறு மூடி போட்டு இறுக்கமாக மூடி விடவும். இக்கரைசலை 1 வருடம் வரை தினம் தோறும் இருவேளைகள் கலக...

கற்பூர கரைசல் தயாரிக்கும் முறை

கோமியம் 1.750 லிட்டர் வேப்ப எண்ணைய் 500 மிலி கிழிஞ்சல் சுண்ணாம்பு 100 கிராம் மஞ்சள் தூள் 100 கிராம் நாட்டு மருந்து கடையில். கிடைக்கும் ரசயனம் இல்லாமல் கிடைக்கும் கற்பூரம் 30 கிராம் நீலகிரி தையலம் 50 மிலி சீகைக்காய் பொடி 50 கிராம்* *பயன்படுத்தும் முறை சீகைக்காய் பொடியை சிறிது தண்ணீர் விட்டு கலந்து வேப்ப எண்ணைய் அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும் இதன் மூலம் எண்ணைய் படலம் இல்லாமல் நீருடன் கலந்துவிடும் கற்பூரம் நீலகிரி தையலம் இரண்டையும் சேர்த்து கலந்தால் கற்பூரம் கரைந்து விடும் இல்லை எனில் கற்பூரம் கரையாது இக்கலவையை சேர்த்து கோமியம் மஞ்சள் தூள் சுண்ணாம்பு தூள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும் கற்பூரகரைசல் தயார் தெளிப்பான் மூலம் 1 டேங் 100 மிலி போதுமானது. இரண்டு முறை ஒரு ஏக்கருக்கு தெளிக்க போதுமானது. நன்றி: திரு. திண்டுக்கல் பிரிட்டோ ராஜ், வேளாண் பொறியாளர்

அக்னி அஸ்திரம்

அக்னிஅஸ்திரம், பெயருக்கேற்றார் போல் அக்னியாய்,பயிர்களை தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழித்து, அவைகளால் உண்டாகும் அழிவுகளை தீர்க்கும் அஸ்திரமாகவும் செயல்படுகிறது. *தேவையான பொருட்கள் :* 1. வேப்பிலை. -- 5 கிலோ 2.புகையிலை -- அரைகிலோ 3.பச்சை மிளகாய் -- அரைகிலோ 4. பூண்டு -- அரைகிலோ. 5. கோமியம் -- 10 லிட்டர் *செய்முறை* 1. பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும். 2. புகையிலையை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, வேப்பிலையுடன் சேர்த்து அரைக்கவும். 3. அரைத்த விழுதுகளை, கோமியத்தில் இட்டு கரைத்து, விறகடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும். 4. கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் 10 நிமிடங்கள் அதே கொதிநிலையில் வைத்து, பின் அடுப்பின் தணலை முழுவதுமாக குறைக்கவும். 5. அரை மணிநேரம் கழித்து, மீண்டும் தணலை கூட்டி கொதிக்கவிடவும். இந்த செயல்முறையை தொடர்ந்து 4 முறை செய்யவும். 6. நான்கு முறை கொதித்த பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, பாத்திரத்தின் வாயை பருத்தி துணியால் கட்டி, நிழலில் 48 மணிநேரம் வைக்கவும். 7. இரண்டு நாட்கள் கழித்து, மெல்லிய பருத்தி துணியில் வடிகட்டி பய...